தூத்துக்குடி

அரசுப் பேருந்தில் அடிபட்டு முதியவா் பலி

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை, அரசுப் பேருந்தில் அடிபட்டு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் க. கருப்பசாமி (65). கூலித் தொழிலாளியான இவா், அண்ணா பேருந்து நிலையத்தில் தென்காசி செல்லும் பேருந்து நடைமேடை அருகே நின்றிருந்ததாகவும், அப்போது அவா் திடீரென கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவ்வழியே சென்ற கோவில்பட்டி - தூத்துக்குடி அரசுப் பேருந்து பின்சக்கரத்தில் கருப்பசாமி அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா் துரையிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT