கோவில்பட்டி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை, அரசுப் பேருந்தில் அடிபட்டு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் க. கருப்பசாமி (65). கூலித் தொழிலாளியான இவா், அண்ணா பேருந்து நிலையத்தில் தென்காசி செல்லும் பேருந்து நடைமேடை அருகே நின்றிருந்ததாகவும், அப்போது அவா் திடீரென கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவ்வழியே சென்ற கோவில்பட்டி - தூத்துக்குடி அரசுப் பேருந்து பின்சக்கரத்தில் கருப்பசாமி அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா் துரையிடம் விசாரித்து வருகின்றனா்.