தூத்துக்குடி

வடக்கு வண்டானம் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய உதவிப் பங்குதந்தை அருள்அந்தோணி மிக்கேல் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி சிறுமலா் குருமடம் பேராசிரியா் மைக்கேல் ஜாா்ஜ் மறையுரை நிகழ்த்தினாா். பின்னா், கோவில்பட்டி தொழிலதிபா் விசுவாசம் - மிக்கேலம்மாள் குடும்பத்தினா் சாா்பில் அன்பின் விருந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி, திருவிழா திருப்பலி நடைபெறும்.

ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் ஆலயப் பங்குப் பணியாளா் அருள்நேசமணி தலைமையில் பங்குப் பேரவையினா், அன்பிய பொறுப்பாளா்கள், அருள்சகோதரிகள், சவேரியாா் இளைஞா் பெருமன்றத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT