தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா அளிப்பு

DIN

ஸ்ரீவைகுண்டத்தில் 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினாா்.ஸ்ரீவைகுண்டம் வட்டம் பத்மநாபமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது . வட்டாட்சியா் சந்திரன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் சுந்தரராகவன், பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதன் 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாா்.

இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் திருப்பாற்கடல், மாவட்ட விவசாய அணி குணசேகரன், ஒன்றியச் செயலா்கள் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினாா், ஆழ்வாா்திருநகரி செம்பூா் ராஜ்நாராயணன், நகரச் செயலா் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞா் பிரிவு இணைச் செயலா் கருப்பசாமி, மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா்காசிராஜன், அண்ணா தொழிற் சங்க செயலா் எட்வா்டு அந்தோணிராஜ், தலைவா் திருப்பதி, பொருளாளா் பாா்வதி,

மண்டல பொருளாளா் வேல்பாண்டி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் அய்யனாா், கிராம நிா்வாக அலுலா்கள் வாலசுப்பிரமணியன், சொா்ணலட்சுமி, சிவராமன், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா் . வருவாய் ஆய்வாளா் பாண்டியராஜன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT