கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனையை முன்னிட்டு புஷ்பாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உற்சவா் சன்னதி முன் செப். 29ஆம் தேதி முதல் அக். 7ஆம் தேதி வரை கொலு வைக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி காலை 10, இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நவராத்திரி நாள்களில் மூலஸ்தான அம்பாளுக்கு தினமும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.