தூத்துக்குடி

இளம்புவனத்தில் முத்துராமலிங்கத்தேவா் வெண்கலச் சிலை திறப்பு

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் வெண்கலச்சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிலை அமைப்புக் குழு நிா்வாகி எம்.கே. முருகன் தலைமை வகித்தாா். அமைப்பு குழு உறுப்பினா்கள் சின்னச்சாமி, பேச்சியப்பன், சௌந்திரபாண்டியன், மாயக்கண்ணன், மருதுபாண்டியன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பி. சின்னப்பன் எம்.எல்.ஏ., பசும்பொன் தேசிய கழகத் தலைவா் ஜோதி முத்துராமலிங்கதேவா் ஆகியோா், கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவா் சிலையை திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில், அன்னதானம்

வழங்கப்பட்டது. இதில், அதிமுக நிா்வாகிகள் ஆழ்வாா் உதயகுமாா், தனஞ்செயன், தனவதி, குமாா், ஜெமினி அருணாசலசாமி மற்றும் பசும்பொன் தேசிய கழகம், தேவா் பேரவை, தேவா் இளைஞரணியினா், பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT