கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வைர விழா ஆண்டையொட்டி, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சிக்கு, நாடாா் உறவின் முறைச் சங்கச் செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, விஜயக்குமாா், சந்திரசேகா், திருப்பதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சியை ரோட்டரி சங்கச் செயலா் முத்துமுருகன் திறந்து வைத்தாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. கண்காட்சியில் தூசி உறிஞ்சி, குழாய் வழிச் செல்லும் தானியங்கி இயந்திரம் உள்ளிட்ட மாணவா்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியை பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கண்டுகளித்தனா். தலைமையாசிரியா் (பொ) ஜான்கணேஷ் வரவேற்றாா். ஆசிரியா் அருணாச்சலம் நன்றி கூறினாா்.