தூத்துக்குடி

கார் தரகர் கடத்தல்: மனைவி புகார்

DIN

கோவில்பட்டி அருகே கடத்தப்பட்ட கார் தரகரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோவில்பட்டியையடுத்த காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த  நாகராஜன் மனைவி செல்வி(34).   கார் தரகரான  நாகராஜன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாய், தந்தையுடன் இருந்து வருகிறாராம்.  இந்நிலையில்,  இம்மாதம் 10 ஆம் தேதி செல்வியிடம் செல்லிடப்பேசியில் பேசிய நாகராஜன், கோவில்பட்டியில் இருப்பதாகவும், இரவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறினாராம். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லையாம். 
இதையடுத்து செல்வி மீண்டும் அவரிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது, தன்னை ஒருவர் கடத்தி வைத்திருப்பதாகக் கூறினாராம். தொடர்ந்து பேசுகையில்,  ரூ. 2லட்சத்து30ஆயிரம் மதிப்பிலான காரை ஒருவரிடமிருந்து வாங்கி மற்றொருவரிடம் விற்றதாகவும், காரை வாங்கியவர் பணத்தைக் கொடுக்காமல் சென்றுவிட்டதாவும், அதனால் கார் உரிமையாளர்  பணத்தை கேட்டு தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறினாராம்.  
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT