தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் 108 சுமங்கலி பூஜை

DIN


 பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் புரட்டாசி கொடை விழாவையொட்டி 108 சுமங்கலி பூஜை  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலர் த.அரசுராஜா, மாவட்டச் செயலர் மாயக்கூத்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு அய்யாவழி பாடகர் சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலையில் உணவு பிரித்தல் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT