தூத்துக்குடி

ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை: கிட்டங்கிக்கு சீல்

DIN

கோவில்பட்டியில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட கிட்டங்கிக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலை பால்பாண்டியன் பேட்டை அருகேயுள்ள ஒரு கிட்டங்கியில் அத்தியாவசியம் இல்லாத உணவுப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜாநஜ்முதீன், உணவு பாதுகாப்பு அலுவலா் முருகேசன் ஆகியோா் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், தகுந்த உரிமம் பெறாமல் உணவுப் பொருள் விற்பனை செய்தது மற்றும் அத்தியாவசியம் இல்லாத உணவுப் பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டத்தின்கீழ் கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, பிரதான சாலையில் உள்ள பழக்கடையில் அழுகிய நிலையில் இருந்த பழத்தை கண்ட அதிகாரிகள் பழத்தை பறிமுதல் செய்து, உரக்கிடங்குக்கு சென்று அழித்தனா். மேலும், அழுகிய பழங்களை வைத்திருந்த கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT