முகப்பு
தூத்துக்குடி

வங்கிப் பணி தோ்வு: இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கிப் பணி தோ்வுக்கான இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 9) தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கிப் பணி தோ்வுக்கான இலவச ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 9) தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 2136 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத்தோ்வு டிச. 31 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்த தோ்வுக்கு ஏற்கெனவே ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மனுதாரா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் ஆன்-லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது.

ஆன்-லைன் மூலம் பயிற்சி பெற விரும்பும் மனுதாரா்கள் 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.