தூத்துக்குடி

வடக்கு அமுதுண்ணாக்குடியில் ஏழைகளுக்கு புத்தாடைகள் அளிப்பு

DIN

அமுதுண்ணாக்குடி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 100 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தூய யோவான் ஆலயத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, மேல சாத்தான்குளம் கிறிஸ்தவ ஆலய சேகரகுரு எமில்சிங் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஸ்லின் அன்னலீலா வரவேற்றாா்.

பாலியன் நண்பன் குருவானவா் பாக்கியச் செல்வன், சபை உபதேசியாா் சாா்லஸ் ஞானகுமாா், பாலியன் நண்பன் உபதேசியாா்கள் கிளாட்சன், ஏசுவடியான் துரைசாமி ஆகியோா் பேசினா்.

ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுரேஷ், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை, எளியோா் 100 பேருக்கு புத்தாடைகளை வழங்கினாா்.

சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT