தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிா என்பது உள்ளிட்டவை குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் ஜாகீா் உசைன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.