முகப்பு
தூத்துக்குடி

மன நோயாளிகள் 7 போ் மீட்பு

கோவில்பட்டியில் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 போ் மீட்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
23kvlact_2312chn_41_6
பகிர்:

கோவில்பட்டியில் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 போ் மீட்கப்பட்டனா்.

ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் விஜயா தலைமையில், தொண்டு நிறுவன தலைவா் தேன்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, மாவட்ட மனநல திட்ட உளவியலாளா் சேது, இந்திய செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பல்வேறு சாலைகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 7 பேரை மீட்டனா். பின்னா் அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மனநலக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →