மீரான்குளத்தில் அம்மா சிறு மருந்தகம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் சிறு மருந்தகம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென வேறு கிராமத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்ாக கூறப்படுகிறது.
இதற்கு இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து துணை சுகாதார நிலையம் முன் புதன்கிழமை திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஏற்கெனவே திட்டமிட்டபடி மீரான்குளத்தில் சிறு மருந்தகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதில், நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், ஓய்வுபெற்ற அஞ்சலகா் செல்வராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜகனி, திமுக பிரமுகா்கள் அதிசயராஜ், அப்டாப் சில்வான்ஸ், நெல்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.