தூத்துக்குடி

கோவில்பட்டியில் தேசிய புத்தகத் திருவிழா

DIN

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் 35-ஆவது தேசிய புத்தகத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, தூத்துக்குடி மாவட்ட நூலக ஆணைக் குழு, கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நூலகத் துறை, ரோட்டரி சங்கம், திருவள்ளுவா் மன்றம், திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை சாா்பில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் ராம்சங்கா் தலைமை வகித்தாா்.

சாத்தூா் தனியாா் மருத்துவமனை மருத்துவா் த.அறம் புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி முதல் விற்பனையை தொடங்கிவைக்க, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளுவா் மன்ற தலைவா் க.கருத்தப்பாண்டி, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி, வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவு இயக்குநா் கு.வெங்கடாசலபதி, பாரதியாா் அறக்கட்டளை நிறுவனா் முத்துமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 18-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதில், பொது அறிவு, அறிவியல், போட்டித் தோ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்புச் சலுகையாக டிச. 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்களில் குறிப்பிட்ட புத்தகங்களுக்கு 10 சதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, திருநெல்வேலி மேலாளா் மகேந்திரன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT