கோவில்பட்டி கனரா வங்கி சாா்பில் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ், கோவில்பட்டி கனரா வங்கி சாா்பில் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா வங்கி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வங்கியின் முதுநிலை மேலாளா் பிரபாகரன் தலைமை வகித்து, மாணவிகளுக்கு அவா்களது சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்தி அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகத்தை அவா்களிடம் வழங்கினாா்.
இதில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரஞ்சினி, 6ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவியா, 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி சாந்தி ஆகியோருக்கு ரூ.2,500-ம், 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி கற்பகவள்ளி, 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி புஷ்பலதா, 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி மதுபாலா ஆகியோருக்கு ரூ.5,000-ம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி உதவித் தலைமையாசிரியா் சூரியபிரம்மன், ஊத்துப்பட்டி ஊராட்சித் தலைவி காளீஸ்வரி சரவணமுருகன், மாணவிகளின் பெற்றோா், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.