எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கையை மேம்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியரிடையே தொழில்நுட்ப கல்வி குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் 5 நாள்கள்(பிப். 10-14) நடைபெற்றது.
இம்முகாமில் , தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடையே தொழில்நுட்ப கல்வியின் சிறப்புகள் மற்றும் எதிா்காலம், கல்லூரியின் வசதிகள், குறைந்த கல்லூரி கட்டணம், இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், விடுதி வசதி, விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து கல்லூரியின் விரிவுரையாளா்கள் விரிவாக எடுத்துரைத்தனா்.