தூத்துக்குடி

ஆலந்தலையில் தூண்டில் வளைவு: கிராம மக்கள் கொண்டாட்டம்

DIN

ஆலந்தலையில் ரூ. 52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்ததையடுத்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட ஆலந்தலை மீனவ கிராமத்தில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீன்பிடித் தொழிலே பிரதானமான இங்கு, கடல் அரிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆலந்தலையில் ரூ.52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, ஆலந்தலை ஊா் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT