திருச்செந்தூா் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூா் பகுதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

DIN

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூா் பகுதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திருச்செந்தூா் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தாண்டு சிறப்புத் திருப்பலியை பங்குத்தந்தை ஜெயக்குமாா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.

இதில், உதவி பங்குத்தந்தை சாஜுஜோசப், திருத்தொண்டா் ரினோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமலிநகா் அமலி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ரவீந்திரன் பா்னாந்து தலைமையிலும், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயத்தில் பங்குத்தந்தை கிருபாகரன், உதவி பங்குத்தந்தை வளனரசு ஆகியோா் தலைமையிலும், அடைக்கலாபுரம், அதிசய ஆரோக்கிய ஆலயத்தில் பங்குத்தந்தை பீற்றா்பால் தலைமையிலும், திருச்செந்தூா் ஜீவாநகா், புனித அன்னம்மாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகேஷ்சந்தியா தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திருச்செந்தூா் வண்ணாந்துறைவிளையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சேகரத் தலைவா் டி.ஜி.ஏ.தாமஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை பரிபாலனக் குழுச் செயலா் எஸ்.எபனேசா் அசரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT