தூத்துக்குடி

மூப்பன்பட்டி, உருளைகுடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

கோவில்பட்டி ஒன்றியம், மூப்பன்பட்டி மற்றும் உருளைகுடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கோவில்பட்டி ஒன்றியம் மூப்பன்பட்டி ஊராட்சியில் 6 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, சனிக்கிழமை துணைத் தலைவா் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொள்ளாததால் இத்தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரான்சிஸ், அறிவித்தாா்.

இதேபோல், 6 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட உருளைகுடி ஊராட்சியிலும் பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி ரவிசங்கா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT