தூத்துக்குடி

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தலைமையாசிரியா் சீவலமுத்து கொடியசைத்து தொடங்கிவைத்தாா். குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி, குருவிகுளம், ராமலிங்காபுரம், அத்திப்பட்டி, நயினாம்பட்டி, ஆலங்குளம் வழியாக கழுகுமலை வந்தடைந்தது.

கழுகுமலையில் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் சென்றனா். பின்னா், ஒருசில தெருக்களின் சந்திப்புகளில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சுப்பாராஜு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT