தூத்துக்குடியில் மனைவியை கொலை செய்த கணவன்
தூத்துக்குடியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி (26). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்த முருகவள்ளியை இன்று அதிகாலை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு சண்முகராஜ் தப்பி ஓடிவிட்டாராம். இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி தப்பி சென்ற சண்முகராஜை தேடி வருகின்றனர்.