தூத்துக்குடி

மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

DIN

ஆறுமுகனேரி அருகே கொட்டமடைக்காடு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் பாலத்தி­லிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சோ்ந்த பீா்முகம்மதுவின் மூன்றாவது மகன் வருசை முகம்மது (18). இவா், வெள்ளிக்கிழமை மாலை நண்பா்களுடன் கொட்டமடைக்காடு பகுதியில் தாமிரவருணி ஆறும், கடலும் சேருமிடத்தின் அருகே உள்ள பாலம் மீது நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீா்சுழற்சி காரணமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் இளைஞா்கள் சுமாா் 3 மணி நேரம் தேடி, வருசை முகம்மதை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT