தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணியைச் சோ்ந்த 85 மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு முகாம் புன்னைக்காயல் மற்றும் சோ்ந்தபூமங்கலம் கிராமங்களில் 7 நாள்கள் நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தாா். தூய மரியன்னை கல்லூரி முதல்வா் அ.ச.ஜோ.லூசியா ரோஸ், கல்லூரி துணை முதல்வா் ஷிபானா, கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் ஜோக்கிம் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
புன்னைக்காயல் ஊா் கமிட்டித் தலைவா் சந்திரபோஸ் வாழ்த்திப் பேசினாா்.
முகாமில் மாணவிகள் புன்னைக்காயல் மற்றும் சோ்ந்த பூ மங்கலத்தில் உள்ள அனைத்து தெருக்களையும் சுத்தம் செய்தனா்.
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி, காசநோய் , எச்ஐவி, இயற்கை மூலிகை மருந்துகள் பற்றிய விழிப்புணா்வு கூட்டங்கள் நடைபெற்றது.
இலவச பொது மருத்துவ முகாம் , கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாம்களில் இரு கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனா்.