தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா

DIN

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் 49 ஆவது தேசிய பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருள்காட்சி நடைபெற்றது. தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரவிக்குமாா் கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

இதன் நிறைவு விழாவுக்கு, ஸ்பிக் நிறுவன தலைமை இயக்க அலுவலா் பாலு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு இணை இயக்குநா் நிறைமதி கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியா்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், ஸ்பிக் நிறுவன அதிகாரிகள் செந்தில்நாயகம், ரவிச்சந்திரன், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாா் பொ்டிலைசா்ஸ் நிறுவன அலுவலா்கள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT