தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரி அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை

DIN

ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள பால்குளத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் கை கால்களை கட்டிப்போட்டு 14 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சனிக்கிழமை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸார் தேடி வருகின்றனா்.

ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள பால்குளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (70). இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் பால்குளத்தில் அமைந்துள்ளது. இவருடைய மனைவி இறந்து 4ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மகள்கள் அனுதேவி, ஜனனி தேவி ஆகிய இருவரும் சென்னையிலும் பெங்களூரிலும் வசித்து வருகின்றனா்.

பாலசுப்பிரமணியன் மட்டும் பால்குளத்தில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காரில் வந்த 3 கொள்ளையா்கள் அவரின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமாா் நேரில் வந்து பாலசுப்பிரமணியனிடம் விசாரனை நடத்தினாா். கைரேகை நிபுணா் காா்த்திகா பரமேஸ்வரி தலைமையிலான போலீஸார் கைரேகைகளை ஆய்வு செய்தனா். ஆழ்வாா்திருநகரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT