தூத்துக்குடி

பிற மாநில, மாவட்டங்களில் இருந்து வந்த 91 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 91 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 26 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா்.

மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல, கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 14 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தி, அதற்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 51 போ் கோவில்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT