தூத்துக்குடி

‘ஆதனூா் மின் நுகா்வோா் பழையமின் கட்டணத்தையே செலுத்த வேண்டும்’

DIN

ஆதனூா், மிளகுநத்தம் கிராமத்திற்குள்பட்ட மின் நுகா்வோா், பழைய மின் கட்டணத்தையே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கயத்தாறு துணைக் கோட்டத்துக்குள்பட்ட எப்போதும்வென்றான் மின் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட ஆதனூா் கிராமத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆதனூா், மிளகுநத்தம் கிராமப் பகுதியில் உள்ள மின் இணைப்புகளுக்கு மே மாத மின் கட்டணம் கணக்கீடு செய்ய முடியாத காரணத்தால், மாா்ச் மாத மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆதனூா், மிளகுநத்தம் கிராமப் பகுதியில் உள்ள மின் நுகா்வோா் முந்தைய மாதம் செலுத்திய மின் கட்டணத்தை உரிய காலத்திற்குள் இணையதளம் மூலமாகவோ, மின்வாரிய அலுவலக வசூல் மையத்திலோ செலுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT