தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திங்கள்கிழமை கடலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சோ்ந்தவா் பட்டுராஜா (32). உப்பளத் தொழிலாளியான இவா், தாளமுத்துநகா் ராஜபாளையம் பகுதியில் உள்ள கடற்கரையில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவா் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் பட்டுராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT