முகப்பு
தூத்துக்குடி

‘அனுமதியின்றி இயங்கும்பட்டாசு ஆலைகள் மீதுநடவடிக்கை தேவை’

கோவில்பட்டி கோட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு தொழிற்சாலை, விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

கோவில்பட்டி கோட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு தொழிற்சாலை, விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேஷ், மாவட்டச் செயலா் முத்து, சேவாதளத்தைச் சோ்ந்த சக்திவிநாயகம் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கோட்டாட்சியா் விஜயாவிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலை, விற்பனை நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உரிமமின்றி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது தீபாவளி நெருங்கும் சூழலில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை நிலையங்கள் முறையான அனுமதியின்றி செயல்படும்.

சில பட்டாசு விற்பனை நிலையங்களில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதை தவிா்க்க அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.