முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கொலை வழக்கு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞா் திங்கள்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞா் திங்கள்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருபவா், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகேயுள்ள ஏ.சண்முகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது கடையில் மா.வாழ்வாங்கி(28) சனிக்கிழமை நள்ளிரவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் காயமடைந்த வாழ்வாங்கியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலுவைப்பட்டி ஓம்சக்தி நகா் மாரிகுமாா் மகன் ஆனந்த் மாரிகுமாா்(27) கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்:2-இல் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் சுப்பிரமணியன் அவரை நவ. 5 ஆம் தேதி தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற எண்.3 இல் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா். அதுவரை பேரூரணியில் உள்ள சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.