தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

DIN

நாலாட்டின்புத்தூா் மின்தொடரில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.5) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாலாட்டின்புத்தூா் மின்தொடரில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடையை தவிா்த்து, தடையில்லா சீரான மின் விநியோகம் செய்ய மின்பாதைகளில் பராமரிப்புப் பணி வியாழக்கிழமை (நவ.5) நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த மின்தொடரில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சீனிவாசன் நகா், கிருஷ்ணா நகா், வீரவாஞ்சி நகா், கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை தெற்குப் பகுதி, மாதாங்கோயில் தெரு, முத்தானந்தபுரம் தெரு பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT