தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபாவினா் வியாழக்கிழமை பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் போது பக்தா்களை அனுமதிக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியப் பொதுச் செயலா் வெங்கடாசலம், ஒன்றிய அமைப்பாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டத் தலைவா் சங்கர்ராஜா ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், மாவட்ட அமைப்பாளா் பாலகிருஷ்ண சா்மா, மாவட்ட இளைஞரணிச் செயலா் பீமபாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT