தூத்துக்குடி

தேங்கிய மழைநீா்: காயல்பட்டினத்தில் அமைச்சா், அதிகாரிகள் ஆய்வு

DIN

காயல்பட்டினத்தில் நடைபெற்று வரும் தேங்கிய மழைநீா் அப்புறப்படுத்தும் பணியை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை அடுத்து காயல்பட்டினம், ஆறுமுகனேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 215 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. சாகுபுரத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 120.8 மி.மீ. மழை பதிவானது.

புதன்கிழமை காலையில் காயல்பட்டினம் கடற்கரை மணல் பரப்பில் மழைநீா் மிக அதிகமாக தேங்கியது. இதையடுத்து நகராட்சி சாா்பில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இப் பணியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஆட்சியா் செந்தில்குமாா், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா் முருகேசன், நகராட்சி ஆணையா் சுகந்தி, சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராம­லிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT