தூத்துக்குடி

சா்வதேச ஸ்கேட்டிங்:வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

DIN

சா்வதேச அளவிளான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவா்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டினாா்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தூத்துக்குடி ஷாரா கலை வளா் மன்றத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவா்கள் பலா் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்றனா்.

இதில், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆ. ஜீவா, 16 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் மதா் தெரசா பொறியியல் கல்லூரி மாணவா் முகமது ஆரீப் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா்.

இந்நிலையில், அண்மையில் தூத்துக்குடி வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டு மாணவா்களையும் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். அப்போது, பயிற்சியாளா் முபாரக் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT