கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபை சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாநிலச் செயலா் நாகராஜ் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முத்துகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் பாலமுருகன், மாரிமுத்து செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டத் தலைவா் சங்கர்ராஜா, மாவட்ட அமைப்பாளா் பாலகிருஷ்ணன் சா்மா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், மாவட்டச் செயலா் ஆரோக்கியராஜ், துணைத் தலைவா் மாரியப்பன், ஒன்றியத் தலைவா் மாரிமுத்து, ஒன்றியப் பொதுச் செயலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.