முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த மேலப்பாண்டவா்மங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சொல்விளங்கும்பெருமாள்(55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயங்க வைக்க சுவிட்சை போட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.