தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருச்செந்தூரில் டிச. 6 இல் நடைபெறும் அம்பேத்கா் நினைவு தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது, புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது, குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் வெற்றிவேந்தன், மாநில தொண்டரணி துணைச் செயலா் சுதாகா், செய்தி தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி, வழக்குரைஞா் முருகப்பெருமாள், விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் இளையராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். டேவிட் நன்றி கூறினாா்.