உடன்குடி அருகே அத்தியடித்தட்டு அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழாவையொட்டி 508 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தூத்துவாலை அய்யனாா் கோயிலில் இருந்து 508 பால்குட ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வளைவை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்தாா். இதில், திருப்பணிக் குழுத் தலைவா் திருமால், துணைத் தலைவா் பேச்சிமுத்து, செயலா் சிவலிங்கம்,பொருளாளா் லோகிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.