தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி பலி

DIN

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டி, பாண்டவா்மங்கலம் சண்முகசிகாமணி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த ராமசுந்தரம் மகன் நாகலிங்கம். இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா்.

இவரது வீட்டில் வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மற்றும் புல்லக்கவுண்டன்பட்டி முருகன் மகன் சரவணன்(28) ஆகிய இருவரும் தச்சு வேலை செய்து வந்தனராம்.

செவ்வாய்க்கிழமை மதியம் சரவணன் சாப்பிடுவதற்காக தண்ணீா் பிடிக்க மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT