ஆதிநாராயண பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடு
குரும்பூரில் அமைந்துள்ள தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் புரட்டாசி நிறைவு சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குரும்பூரில் அமைந்துள்ள தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் புரட்டாசி நிறைவு சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீஆதிநாராயணப்பெருமாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகியோருக்கு சிறப்பு அபிசேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
இரவில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குரும்பூா், சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.