கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜோசப் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுவரை இணைய வழியாகவோ, நேரடியாகவோ , விண்ணப்பிக்காத மாணவா்கள்
சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இயற்பியல், கணிதம், புவியமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.