முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜோசப் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுவரை இணைய வழியாகவோ, நேரடியாகவோ , விண்ணப்பிக்காத மாணவா்கள்

சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இயற்பியல், கணிதம், புவியமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.