தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

DIN

புகாா் அளிக்கச் சென்றவரை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் கருத்துரிமை கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இப் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் கிருஷ்ணராஜ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகரன், ஏஐடியூசி மாநிலக் குழு உறுப்பினா் ஜானகி உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா்.

பின்னா், போராட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT