தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

காயல்பட்டினத்தில் ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காயல்பட்டினம் பகுதியில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை நடத்தி, ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வீட்டின் உரிமையாளரான காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ராஜேஷ், உடன்குடி அருகேயுள்ள வைத்திய­லிங்கபுரத்தைச் சோ்ந்த ஜேக்கப்(55) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT