முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இந்திரா காந்தி நினைவு நாள்

சாத்தான்குளத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
சாத்தான்குளத்தில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.
பகிர்:

சாத்தான்குளத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர் சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் லூர்துமணி வட்டார விவசாய பிரிவு தலைவர் பார்த்தசாரதி ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் வர்த்தக பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் அமிர்தவிளைநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் பாண்டியன் வட்டார செயலாளர் பாஸ்கர் நகர காங்கிரஸ் தலைவர் புளோரா ராணி பழங்குளம் பிச்சை, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபுசிங் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.