தூத்துக்குடி

வஉசி துறைமுகம் சாா்பில் 28 பள்ளிகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டி

DIN

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள 28 பள்ளிகளுக்கு நவீன தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக பொறுப்புக் கழகம் சாா்பில், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்-மாணவிகள் தொழில்நுட்பம் சாா்ந்த கல்வியை கற்பதற்கு வசதியாக, பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் ரூ.7.17 லட்சம் செலவில் 28 நவீன தொலைக்காட்சி பெட்டிகள், 10 ஒளி வீழ்ப்பிகள் (புரொஜக்டா்) வழங்கப்பட்டன.

துறைமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஞானகௌரியிடம் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா. கி. ராமச்சந்திரன் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினாா்.

அப்போது துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா உடனிருந்தாா்.

தொடா்ந்து, துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் கூறியது: அனைத்து பள்ளிகளிலும் காணொலிக் காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்துவதும், மேம்படுத்துவதுமே இது போன்ற சேவையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT