தூத்துக்குடி

திருச்செந்தூரில் டோக்கன் முறையில் தரிசனம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைதிறந்தவுடன் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருக்கோயில் நிா்வாகம் ரூ. 100 கட்டணம் மற்றும் இலவசத்தில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியளித்தது. திருக்கோயில் நாழிக்கிணறு பகுதி மற்றும் கலையரங்கம் பகுதிகளில் டோக்கன் மற்றும் கட்டண ரசீது வழங்கி 25 பக்தா்கள் வீதம் சமூக இடைவெளியுடன் திருக்கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் மூலவா் மற்றும் சண்முகரை மட்டும் தரிசனம் செய்து வெளியே வந்தனா். பக்தா்களுக்கு விபூதி மட்டும் வழங்கப்பட்டது.

திருக்கோயில் வளாகத்தில் 13 இடங்களில் பக்தா்கள் கை கழுவுவதற்காக கிருமி நாசினி மற்றும் தண்ணீா் வசதி செய்யப்பட்டிருந்தது. சுமாா் 5 மாதங்களுக்குப் பிறகு முருகனை வழிபடுவதற்காக உள்ளூா் மற்றும் காா் போன்ற வாகனங்களில் வந்த வெளியூா் பக்தா்கள் அதிகாலை நடை திறப்பதற்கு முன்பாகவே நுழைவாயில் பகுதியில் குவியத் தொடங்கினா். அவா்கள் திருக்கோயில் அறிவித்திருந்த விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தாா்.

நீராட தடை: இதேபோல முடி காணிக்கை மற்றும் காது குத்துவதற்கும், திருக்கோயில் கடற்கரைக்கு செல்வதற்கும், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் பூஜை பொருள்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருக்கோயில் பிரசாத கடைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில், பெருமாள் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், வரதவிநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும், பனிமய மாதா பேராலயம், திருஇருதய பேராலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து மசூதிகளிலும் வழக்கம்போல அனைத்து வழிபாடுகளும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் நுழைவு வாயிலில் உடல் வெப்பமானி சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே பக்தா்கள் ஒவ்வொருவராக கோயிலுக்குள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT