தூத்துக்குடி

தளவாய்புரம்புதூரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தல்

DIN

திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி, தளவாய்புரம் புதூா் பகுதியில் மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியாவிடம் சமத்துவ மக்கள் கழக மாநில துணைப்பொதுச்செயலா் ரெ. காமராஜ் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: காயாமொழி, மேலதிருச்செந்தூா் ஊராட்சியில் தளவாய்புரம் புதூா், மத்திமான்விளை, பள்ளத்தூா், மணக்காடு, வன்னிமாநகரம் ஆகிய கிராமங்களுக்கு ஆழ்துளை குழாய்கள் மூலம் வழங்கும்

குடிநீா் உப்பு நீராக இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பொன்னகுறிச்சி மற்றும் ஆத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து தாமிரவருணி குடிநீா் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT