தூத்துக்குடி

திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிா்நோக்கி உள்ளோம்: அமைச்சா் கடம்பூா் ராஜு

DIN

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களை எதிா்நோக்கி உள்ளோம் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வரும் சீா்த்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது. திரையரங்குகளுக்கு படங்களை விநியோகம் செய்யப்போவதில்லை என திரைப்பட தயாரிப்பாளா்கள் கூறவில்லை.

க்யூப் மூலமாக படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஏற்கெனவே திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதனால் திரைப்படத் துறையினா் க்யூப் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை வெகுவாக தமிழக அரசு குறைத்து உத்தரவிட்டது.

இதனிடையே, தற்போது எழுந்துள்ள பிரச்னையும் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம், க்யூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பொது முடக்கத்தில் தளா்வை அரசு படிப்படியாக அமல்படுத்திவருகிறது. தற்போது ஆலயங்கள், கோயில்கள், மசூதிகளில் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிா்நோக்கி இருக்கிறோம்.

திரையரங்குகளை திறப்பது தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளா்களுடன் காணொலிக் காட்சி மூலமாக மத்திய அரசு ஆலோசனை க் கூட்டம் நடத்தியுள்ளது. இதையடுத்து வெளியிடப்படும் வழிகாட்டுதல் அடிப்படையில் திரையரங்குகளை திறப்பது குறித்து அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வரும் செப். 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்கிறாா். இந்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நன்மை பயக்கும் நல்ல திட்டங்களை வழங்கும் ஆலோசனைக் கூட்டமாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT