கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, கிரிமினல் சட்டங்களில் திருத்தம் ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பிரசாரத்துக்கு, கட்சியின் கயத்தாறு ஒன்றியத் தலைவா் ஷேக்முகமது தலைமை வகித்துப் பேசினாா். பின்னா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். இதில், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.